×

நெல்லையில் டெரிக் மஹிந்திரா கார் ஷோரூம் திறப்பு

நாகர்கோவில், ஜன. 4:  நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கான  அங்கீகரிக்கப்பட்ட பெர்சனல் வாகனங்களில் டீலராக டெரிக் ேமாட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் டெரிக் மஹிந்திரா நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து இந்நிறுவனத்தின் புதிய கார் ஷோரூம் பாளை டக்கரம்மாள்புரம், சதர்ன் ஹோண்டா அருகே திறக்கப்பட்டுள்ளது. இந்த ேஷாரூமை முன்னாள் எம்.பி.யான எம்.சி பாலன் முன்னிலையில் மஹிந்திரா நிறுவனத்தின் தென்மண்டல பொது மேலாளர் மனோஜ் குமார் குப்தா திறந்துவைத்தார். இதையடுத்து மஹிந்திரா நிறுவனத்தின் கஸ்டமர் கேர் தென்மண்டல பொது மேலாளர் சுப்பையா, பணிமனையைத் திறந்து வைத்தார். விழாவில் கஸ்தூரி ஸ்டாலின், வசந்தா பாலன் குத்து விளக்கேற்றினர். விழாவில் டெரிக் குரூப்பின் நிர்வாக இயக்குநர் ஸ்டாலின், இயக்குநர் டெரிக் ஸ்டாலின், மஹிந்திரா நிறுவனத்தின் மண்டல விற்பனையாளர் ஹரி, மண்டல கஸ்டமர் கேர் மேலாளர் செந்தில், பங்குத்தந்தை சகாய ஜோசப், ஆடிட்டர்கள் குளத்தூரான் பிள்ளை, கமலஹாசன் உள்ளிட்ட பலர்  பங்கேற்றனர். ஏற்பாடுகளை டெரிக் குரூப் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Tags : car showroom opening ,
× RELATED நெல்லையில் டெரிக் மஹிந்திரா கார் ஷோரூம் திறப்பு